Tuesday, September 7, 2010

ஒரு வரி கவிதை பாகம் 2


சொர்க்கத்தில் இடம் வேண்டாம் உன் பார்வை மட்டும் போதும.

மருந்தில்லாத நோய்க்கு புன்னகையால் மருத்துவம் செய்பவள் நீ.

நான் தினம் பார்க்கும் பௌர்ணமி உன் முகம்.

காத்திருக்கும் வரை தெரியாத கால்வலி நீ வர மாட்டாய் என்றதும் தெரிகிறது.

காலம் முழுவதும் கவலை இல்லாமல் இருக்க விருப்பம் இல்லை காதலிப்போம் வா பெண்ணே.

என் மனமென்னும் வெள்ளை காகிதத்தில் சிரிப்பால் கவிதை எழுத்து முறைப்பால் கிறுக்கிவிடாதே.

1 comment: