Tuesday, February 8, 2011
உன் பிரிவு
நாட்கள் நகர்கிறது
காலம் மாறவில்லை
நம் பாதையில் பூசெரிந்த மரங்கள்
வேலை நிறுத்தம் செய்கிறது
நாம் கை கோர்த்து நடந்த தடம்
ஒரு வழி பாதையாக மாறியுள்ளது
கரை தொடும் அலைகள்
காலை தழுவ மறுக்கிறது
உனக்கு மலர் தந்த செடியும்
மொட்டை விரிக்க மறுக்கிறது
விரல்களுக்கிடையே இருந்த உறவு எங்கே என்று
என் விரல்களும் வினா எழுப்புகிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை பிரதிபலிகிறது
தனிமையில் உன் குரலின்
எதிரொலி என் காதில்
என்னிடம் இல்லைதான் என் இதயம்
இரும்பாய் கனக்கிறது
நெஞ்சுக்குள் இருக்கும் உன் நினைவு
நெஞ்சை கிழித்து வெளியே செல்ல துடிக்கிறது
கண்ணுக்குள் இருக்கும் உன் பிம்பத்தால்
கண்ணீரும் இனிக்கிறது
மரணம் கூட மறுக்கிறது
இவன் மரித்துவிட்டவன் என்று
Thursday, January 6, 2011
வளரும் காதல்
காதலை சொன்ன பிறகும்
கட்டியணைக்காத உன் கண்ணியத்தில்
வளர்கிறது என் காதல்
கண்ணை மட்டும் பார்த்து
கதை பேசும் உன் கட்டுப்பாட்டில்
வளர்கிறது என் காதல்
விரல் மட்டும் கோர்த்து
நடக்கும் உன் நாகரிகத்தில்
வளர்கிறது என் காதல்
என் வெட்கத்தை மட்டும் ரசிக்கும்
உன் கண்ணில்
வளர்கிறது என் காதல்
என் உணர்வை மட்டும்
ரசித்து எழுதிய உன் கவிதையில்
வகர்கிறது என் காதல்
தாமரை இலையில் ஒட்டாத
தண்ணிர் போல்
காமத்தில் ஒட்டாத உன் காதலில்
வளருதடா என் காதல்.
Subscribe to:
Posts (Atom)