Monday, September 20, 2010
ஒரு வரி கவிதை பாகம் 3
காலமெல்லாம் காத்திருந்தும் வரவில்லை நீயும் உன் காதலும்
இனி என் வாழ்வில் இல்லை அம்மாவாசை நீ அருகில் இருப்பதால்
ஒரு வார்த்தையில் ஒரு கவிதை காதல்
எனக்கு கல்லறை கட்ட உன் கல் நெஞ்சை கொடு பெண்ணே
கல்லறையிலும் இன்பமாக இருப்பேன் உன் நினைவு போதும்
ஊர் பேசும் நம் காதலை உள்ளத்தில் வைத்துகொள்ளதே(கொல்லாதே)
உன்னை மறக்க நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து, என்னை மறந்தேன்
மரணத்தை வெல்ல வேண்டும் உன் காதலை கொடு எனக்கு
கம்பல் கூட கவிதை பேசுகிறது நீ தலை அசைகையில்
உன்னை எனக்கு காட்டிய கண்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை கண்ணீர்
Tuesday, September 7, 2010
ஒரு வரி கவிதை பாகம் 2
சொர்க்கத்தில் இடம் வேண்டாம் உன் பார்வை மட்டும் போதும.
மருந்தில்லாத நோய்க்கு புன்னகையால் மருத்துவம் செய்பவள் நீ.
நான் தினம் பார்க்கும் பௌர்ணமி உன் முகம்.
காத்திருக்கும் வரை தெரியாத கால்வலி நீ வர மாட்டாய் என்றதும் தெரிகிறது.
காலம் முழுவதும் கவலை இல்லாமல் இருக்க விருப்பம் இல்லை காதலிப்போம் வா பெண்ணே.
என் மனமென்னும் வெள்ளை காகிதத்தில் சிரிப்பால் கவிதை எழுத்து முறைப்பால் கிறுக்கிவிடாதே.
Subscribe to:
Posts (Atom)