Friday, June 18, 2010

என் காதலி



என் வாழ்வில் முதன்முதலாக வரும் அவளை தேடினேன். நீண்ட நாள் தேடினேன் கடைசியாக அவளை கண்டேன். கண்டவுடன் காதல் கொண்டேன். நான் என்னவள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடனோ அதற்கு சிறிதும் மாறாமல் அவள் இருந்தாள். மெதுவாக அவளிடம் சென்று என் விருப்பதை கூறினேன். சற்று நேர யோசனைக்குபின் சரி என்றாள். என் வாழ்வின் உச்சகட்ட இன்பத்தை அடைந்தேன். வானில் பறப்பது உணர்ந்தேன். கை கோர்த்து நடந்தோம். அனைத்து இடம்களிலும் சுற்றினோம். ஊர் ஊரக திரிந்தோம். உலகின் அனைத்து இடம்களிலும் எங்களுடைய தடம் பதிக்க ஆசைப்பட்டோம். பார்த்தவர்கள் அனைவரும் மிக சரியான இணை என்று கூறினார்கள். என் நண்பர்கள் நல்ல துணை தேர்ந்தெடுத்தாய் என்று கூறி பாரட்டினார்கள்.

சந்தோசமாக திரிந்த ஒருநாள் திடிரென்று இதற்கு மேல் என்னால் வர இயலாது என்று மக்கர் பண்ணினாள். உன் விருப்பதை இப்போதே நிறைவேற்றுகிறேன் என்று கூறி அதில் சிலவற்றை நிறைவேற்றினேன். ஆனால் அவள் ஒத்துழைக்கவில்லை. சற்று கோவம் சோகத்துடன் விடு திரும்பினேன்.

அந்த நிகழ்வை மறந்துவிட்டு மறுபடியும் சந்தோசமாக சுற்றினோம். முக்கியமான நிகழ்சிக்கு செல்ல வேண்டும் தயாராக இருக்குமாறு கூறினேன். மறுநாள் கிளம்பும்போது என்னால் வர இயலாது என்றாள். ஏன் என்ற கேள்விக்கு பதிலில்லை. மிகவும் சிரமப்பட்டு அவளுக்கு சில பணிவிடைகள் செய்தேன். வர இயலாது என்று உறுதியாக கூறிவிட்டாள். வேறு ஒருவருடன் செல்ல விரும்பவில்லை ஆகையால் நிகழ்ச்சியை தவற விடேன்.

தொடர்ந்து தொல்லை கொடுத்தாள். ஆனால் அவளிடம் கோபம் கொள்ளவில்லை. அவளுடைய நடத்தை பற்றி நண்பர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் நீங்கள் முன்பு புதியவர்களா இருந்ததால் அதீதா அன்பு காரணமாக சிலவற்றை அறியவில்லை அவளுக்காக நீ செலவு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் உன் வாழ்கையை அவள் மகிழ்ச்சியாக வைதுகொள்வாள் என்று கூறினார்கள். நான் அதற்கு சம்மதித்தேன்.

முன்புபோல் மறுபடியும் சுற்றினோம்,துள்ளி திரிந்தோம். அவள் கேட்கும்போதெல்லாம் அவளுக்காக செலவு செய்தேன். கேட்கும்போதெல்லாம் எண்ணாமல் அள்ளி அள்ளி கொடுத்தேன். மேலும் மேலும் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தாள் என்னால் இயலவில்லை. மெதுவாக அவளிடம் கூறினேன். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் ஆனால் என்னால் இதற்கு மேல் செலவு செய்ய முடியவில்லை என்று கூறினேன். அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. செய்த செலவிற்காக சில நாள் என்னுடன் திரிந்தாள்.

ஒருநாள் இதற்கு மேல் உன்னுடன் பழக முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அவள் மீது சிறிதும் கோபபடாமல் மனது நிறைய வருத்ததுடன் அமைதியாக இருந்தேன். தினமும் அவளை பார்த்து ரசித்தேன். நான் பார்க்கும்போதெல்லாம் அமைதியாக இருப்பாள். ஒரு மாதத்திற்கு மேல் அவளை பார்த்து பார்த்து ரசித்தேன் ஆனால் பழகவில்லை. அவளின் மௌனம் மிகவும் வலித்தது எனக்கு. நான்தான் இன்பமாக இருக்கவில்லை என்னால் அவள் ஏன் துன்பப்பட வேண்டுமென கனத்த இதயத்துடன் ஒரு முடிவு செய்தேன்
அவளை பிரிந்து விடலாமென்று.


பல நாள் துன்பத்திற்கு பிறகு வீட்டில் எனக்காக புதியவளை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாமல் ஏட்றுகொண்டேன். புதியவள் பொருத்தமாக இருந்தாள். உதவிகரமாகவும்,சிக்கனமாகவும்,மனதுக்கு பிடித்தபடியும் நடந்து கொண்டாள். அவள் மீது எனக்கு அக்கறை இருந்தது ஆனால் ஆசையும் காதலும் எழவில்லை. நண்பர்கள் இதுதான் வாழ்கை இப்படித்தான் இருக்கும் என அறுதல் கூறினார்கள்.

அவளை மறக்க இயலாமல் மனம் துடிதுகொண்டிருகிறது. எங்கேயாவது சாலையில் அவள் குரல் கேட்டால் மனம் அலைபாய்ந்து கண்கள் நீயாக இருக்கவேண்டுமென தேடும். உன்னை போல் ஒருவளை பார்த்தல் சிறிது நேரம் நின்று ரசித்து கொண்டிருக்கிறேன். என்றாவது ஒருநாள் உன்னை காண்பேன் என்ற ஆசையுடன் ஒரு விநாடிகூட இமை மூடாது காத்திருக்கிறேன்.

இப்படிக்கு
உன்னை மறவா காதலன்

குறிப்பு: அவள் பெயரை சொல்ல மறந்துவிட்டேன் அவள் பெயர் yamaha (பைக்)
அவளை வாழ்நாள் முழுவதும் மறவாமல் இருக்கவேண்டுமென என் மின் அஞ்சல் முகவரியில் அவளை இணைத்தேன். யாராவது அவளை கண்டால் சொல்லுங்கள் இறப்தற்கு முன் உன்னை ஒருமுறையாவது காண வேண்டுமென ஒருவன் காத்திருக்கிறான் என்று.