Tuesday, August 31, 2010

சில வரிகள்

வெட்ட வெளியில் தனி மரமாய் நின்றேன்
சூரியனை வந்து வெளிச்சம் கொடுத்தை
இரவில் நினைவு எனும் நிலவாக வந்தாய்
பாசம் எனும் மேகத்துடன் வந்து அன்பு எனும் மழை பொழிந்தாய்
இன்று ஆயிரமாயிரம் சொந்தங்கள் உன்னை நானறிவேன் என்னை
நீ அறிவாயா ??

ஒவொரு மனிதனின் வாழ்விலும் ஒரு சோக கதை உண்டு
உன் சோக கதையின் தலைப்பை ஒருவரிடம் சொல்
அவர்களுடைய கதையின் முற்றும் வரை உன்னிடம் சொல்வார்கள்.

Tuesday, August 17, 2010

ஒரு வரி கவிதைகள் பாகம் 1


என்னவளின் இதழை தெரியாமல் கடித்த எறும்பு இறந்து விட்டது சர்க்கரை நோய் வந்து.

அடித்து விட்டு செல் பெண்ணே காதல் பார்வையில் கொன்றுவிட்டு போகதே.

தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி இருவருக்கும் கோவில் புசாரியாய் நான் பக்தையாய் அவள்.

சிறிய நெற்றியில் ஒற்றை பொட்டை ஓட்டிவிட்டு நல்லாயிருக்கா என்று கேட்கிறாய் எதை சொல்ல அந்த முகத்தில்.

ஒரு பார்வை பார்த்துவிட்டு செல் பெண்ணே உடனடியாக ஒரு கவிதை வேண்டும் எனக்கு.

காற்றில் மிதக்கும் உன் ஒற்றை முடியை ஒதுக்குவது போல் காதலில் மிதக்கும் என் இதயத்தை ஒதுக்காதே.

காதல் உன்னை ஆனந்தபடுத்தும்
காதலி உன்னை அழவைப்பாள்.