Thursday, January 6, 2011
வளரும் காதல்
காதலை சொன்ன பிறகும்
கட்டியணைக்காத உன் கண்ணியத்தில்
வளர்கிறது என் காதல்
கண்ணை மட்டும் பார்த்து
கதை பேசும் உன் கட்டுப்பாட்டில்
வளர்கிறது என் காதல்
விரல் மட்டும் கோர்த்து
நடக்கும் உன் நாகரிகத்தில்
வளர்கிறது என் காதல்
என் வெட்கத்தை மட்டும் ரசிக்கும்
உன் கண்ணில்
வளர்கிறது என் காதல்
என் உணர்வை மட்டும்
ரசித்து எழுதிய உன் கவிதையில்
வகர்கிறது என் காதல்
தாமரை இலையில் ஒட்டாத
தண்ணிர் போல்
காமத்தில் ஒட்டாத உன் காதலில்
வளருதடா என் காதல்.
Subscribe to:
Posts (Atom)