Thursday, July 22, 2010

என்ன தவறு செய்தோம் நங்கள்?


என்ன தவறு செய்தோம் நங்கள்
ஏன் எங்களை வதைகின்றிர்கள்
நன்றாக விளையாடினோம் ஆகையால்
லட்சம் லட்சமாக பெற்றோம்
உலகின் தலை சிறந்த அணி என்ற பெயர் பெற்றோம் ஆகையால்
கோடி கோடியாய் சம்பாதித்தோம்
விளம்பரங்கள் கோடி கோடியாய் கொண்டு வந்து
கொட்டி கொடுத்தன வீடு வந்து கொடுப்பதை
வேண்டாம் என்பாய நீ?

ஒரு நடிகை கூறினால் அவர்கள் செல்கிறார்கள்
பக்கத்துக்கு நாட்டிற்கு நான் ஏன் செல்ல கூடாது என்று
நங்கள் என்ன எங்கள் வேலைகா செல்கிறோம்
நாட்டிற்காக விளையாட செல்கிறோம்.
எங்களுக்கு மட்டும் ஆபத்து இல்லையா
விளையாட்டு அரங்கின் வாசலில் வைத்து
தீவிரவாதிகள் சுட பார்கிறார்கள்.

என்ன தவறு செய்தோம் நங்கள்?

Wednesday, July 7, 2010

மௌனத்தின் வலி


உன்னை சந்தித்த பிறகு ஒரு நிமிடம் கூட நான் தனிமையில் இருந்ததில்லை. உன்னுடன் சிலநாள் உன் நினைவுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்.

ஏன் மௌனமாக இருகின்றாய் என்னிடம் எனக்காக இந்த உலகில் எதை வேண்டுமானாலும் விடுவதற்கு தயாராக இருப்பதாக கூறினாய். இன்று உன் மௌனத்தை மட்டும் விட்டுவிட மறுகின்றாய். என் உயிரே தனிமை வதைகின்றது. இந்த உலகம் என்னை மட்டும் விட்டுவிட்டு சுழலுகின்றது. உன்னை விட்டுபிரிந்த அந்த கடைசி நாளன்று இன்னும் நான் நின்று கொண்டிருக்கிறேன். விரைவில் வந்து என் கைகோர்த்து இந்த உலகிற்கு என்னை அறிமுகபடுத்திவை.

உன்னை தேடி தேடி இந்த உலகில் என் ஆன்மா தொலைந்துவிட்டது. உன் நினைவை சில நிமிடம் விட்டுவிட்டு இருப்பதற்கு நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டது. கடவுள் கூட அதற்கு துணை நிற்கவில்லை.

நம்முடைய காதல் ஒருபொழுதும் தோற்பதில்லை நம்முடைய காதல் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்வரை. என் காதல் இன்று வரை தோற்கவில்லை. எனக்கு என்னைவிட என் மீது நீ கொண்ட காதல் மீது உள்ள நம்பிக்கையால்.