Tuesday, February 8, 2011
உன் பிரிவு
நாட்கள் நகர்கிறது
காலம் மாறவில்லை
நம் பாதையில் பூசெரிந்த மரங்கள்
வேலை நிறுத்தம் செய்கிறது
நாம் கை கோர்த்து நடந்த தடம்
ஒரு வழி பாதையாக மாறியுள்ளது
கரை தொடும் அலைகள்
காலை தழுவ மறுக்கிறது
உனக்கு மலர் தந்த செடியும்
மொட்டை விரிக்க மறுக்கிறது
விரல்களுக்கிடையே இருந்த உறவு எங்கே என்று
என் விரல்களும் வினா எழுப்புகிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை பிரதிபலிகிறது
தனிமையில் உன் குரலின்
எதிரொலி என் காதில்
என்னிடம் இல்லைதான் என் இதயம்
இரும்பாய் கனக்கிறது
நெஞ்சுக்குள் இருக்கும் உன் நினைவு
நெஞ்சை கிழித்து வெளியே செல்ல துடிக்கிறது
கண்ணுக்குள் இருக்கும் உன் பிம்பத்தால்
கண்ணீரும் இனிக்கிறது
மரணம் கூட மறுக்கிறது
இவன் மரித்துவிட்டவன் என்று
Subscribe to:
Post Comments (Atom)
excellcent
ReplyDeleteஅருமையான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்